பள்ளிபாளையம்:பள்ளிபாளையத்தில் 36 மணிநேரத்தில் அமைக்கப்பட்ட ரயில் பாலத்திற்கு நான்கு மாதங்களாகியும் சாலை அமைக்கப்படாததால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.பள்ளிபாளையம் பயணியர் மாளிகை முன்புள்ள பழைய ரயில்பாலம் மே 4ம் தேதி காலை 8 மணிக்கு அகற்றப்பட்டு 5ம் தேதி மாலை 5 மணிக்கு புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டது. 36 மணி நேரத்தில் அமைக்கப்பட்ட இந்த பாலம் தென்னக ரயில்வேயில் அரிய சாதனையாக கருதப்பட்டு பலரின் பாராட்டுதலையும் பெற்றது. பாலப்பணிகள் முடிந்ததும், அதற்கான சாலை அமைக்காமல் 4 மாதங்களாக ரயில்வே நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.