சென்னை : ஆக்ஸ்போர்டு தடுப்பூசியான கோவிஷீல்டின் இரண்டாம் கட்ட மனித பரிசோதனை இன்று புனேவில் உள்ள பாரதி வித்யாபீட மருத்துவக் கல்லூரியில் துவங்க உள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் பெற்றுள்ளது. இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருக்றது. மொத்தம் 3 கட்டங்களாக மனிதர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிடப்படிருந்தது.
கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டின் 2ம் கட்ட பரிசோதனை இந்தியாவில் தொடக்கம் ; ராஜிவ் காந்தி, ராமச்சந்திரா மருத்துவமனைகளிலும் தடுப்பூசி சோதனை!!
- மருத்துவமனைகளில்
- விசாரணை
- கட்டம் 2
- கொரோனா
- இந்தியா
- ராமச்சந்திர
- தடுப்பூசி சோதனை
- கோவ்ஷீல்ட்
- ராஜீவ் காந்தி
- கட்ட
- சோதனை