தாம்பரம்: கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வலியுறுத்திய நகராட்சி ஊழியர் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் தாம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 6 இடங்களில் கொரோனா பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம்கள் நேற்று நகராட்சி சார்பில் நடத்தப்பட்டன. கிழக்கு தாம்பரம், ரோஜா தோட்டம், திலகவதி தெருவில் மருத்துவ முகாம் நடைபெற்றபோது, அருள் நகரை சேர்ந்த தினேஷ் என்பவர்அவ்வழியாக முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அதை பார்த்த நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில் அவரை தடுத்து நிறுத்தி, முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றக் கூடாது, கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம் எனக்கூறி, முகாமில் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுமாறு அவருக்கு அறிவுறுத்தினார்.