சென்னை: அயனாவரத்தில் கடந்த 21ம் தேதி அதிகாலை கஞ்சா மொத்த வியாபாரியும் பிரபல ரவுடியுமான சங்கரை (48) போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். இதுதொடர்பாக, என்கவுன்டர் வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த கூடாது. அதேநேரம் காவல் துறையில் உள்ள மற்றொரு பிரிவின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை மாநகர காவல் துறையில் இருந்து நேற்று சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அதைதொடர்ந்து ரவுடி சங்கரை என்கவுன்டர் செய்த இன்ஸ்பெக்டர் நட்ராஜ் உட்பட சம்பவ இடத்தில் இருந்த போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விரைவில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.