சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து வருகிற 27 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். கொரானா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நேரடியாக சென்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து வருகின்ற 27ஆம் தேதி காலை கடலூர் மாவட்டத்தில் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். அதையடுத்து அன்று மதியம் நாகப்பட்டினம் மாவட்டத்திலும் முதலமைச்சர் பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.