பைக் திருடிய வாலிபருக்கு தர்ம அடி: போலீசாரிடம் ஒப்படைப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவர் தனது வீட்டின் முன்பு பைக்கை நேற்று முன்தினம் இரவு நிறுத்தியிருந்தார். காலையில் எழுந்து சுபாஷ் பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த  பைக்கை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுபாஷ் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் பைக்கை தேடிவந்தார். இந்நிலையில் சிங்கபெருமாள் கோயில் அடுத்த தெல்லிமேடு பகுதியை சேர்ந்த வேலுவின் மகன் பிரவீன் (20)  சுபாஷ் பைக்கில் அமர்ந்து தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதாக சுபாஷுக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்று பார்த்தபோது, சுபாஷுக்கு தனது பைக் என்று தெரிய வந்தது. உடனே பிரவீனை பிடித்து வில்லியம்பாக்கம் அழைத்து வந்து மரத்தில் கட்டி தர்ம அடி கொடுத்து விசாரித்தனர். அதில் பைக் திருடியதை பிரவீன் ஒப்புக்கொண்டான். பின்னர் செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரிகின்றனர்.

Related Stories: