தண்டையார்பேட்டை:ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், இளம் வழக்கறிஞர்கள் மற்றும் அன்றாட வருமானத்தை நம்பியிருக்கும் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதமாக மூடியிருக்கும் குற்றவியல் நீதிமன்றங்களை திறக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் தலைவர் முகமது கவுஸ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கோரிக்கை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.