மதுரை: சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் காவலர்கள் இருவருக்கு ஜாமின் கொடுக்க சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். தற்போது இந்த வழக்கினை சி.பி.ஐ. விசாரிக்கிறது. இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாத்தான்குளம் ஏட்டு தாமஸ் பிரான்சிஸ், ஸ்டேஷனில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டருக்குரிய பணியை செய்கிறேன். சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்டதில்லை. இச்சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை. எனவே ஜாமின் அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.