திருவனந்தபுரம்: மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்து உள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி இரவு பெய்த பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்குள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த 78 பேர், அவர்களது உறவினர்கள் 4 பேர் என மொத்தம் 82 பேர் சிக்கினர். இதில் ஏற்கெனவே 6 மாதக் குழந்தை உள்பட மொத்தம் 63 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி 14வது நாளாக இன்று காலையில் தொடங்கியது.