ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க மத்திய உணவுக்கு பதிலாக உலர் உணவுப்பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. சத்துணவு திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.

Related Stories: