பூண்டி ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

திருத்தணி: திருவள்ளூர் அடுத்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் இவரது மகன் இமானுவேல். இவரது உறவினர் ரமேஷ் என்பவரின் மகன் சஞ்சய்குமார். இவர்கள் இருவரும் பூண்டி நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்றுள்ளனர். முதலில் இமானுவேல் இறங்கியதும், சிறிது நேரத்தில் நீரில் மூழ்கியுள்ளான். இதனையடுத்து இமானுவேலை காப்பாற்ற சஞ்சய்குமாரும் குதித்துள்ளான். இதில் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கும், புல்லரம்பாக்கம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி முதலில் சஞ்சய்குமாரை உடலை மீட்டனர். அதனைத் தொடர்ந்து அதே பகுதியில் சேற்றில் சிக்கிய இமானுவேலை வலைவிரித்தும், கொக்கி போட்டும் நீண்டநேரம் தேடினர். நீண்ட தேடுதல் பிறகு பூண்டி கிராமத்து இளைஞர்களும் இறங்கி தேடத் தொடங்கினர். அதனையடுத்து இமானுவேலையும்  சடலமாக மீட்டனர்.

Related Stories: