சென்னை: சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வரின் கையால் தங்கப்பதக்கம் வாங்கியதைக் கொண்டாடும் வகையில், குன்றத்தூர் தாசில்தார் ஜெயசித்ரா, நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கறிவிருந்து கொடுத்தார். இதுகுறித்த செய்தி தினகரன் நாளிதழில் நேற்று பிரசுரமானது. கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் வேளையில், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரியே மாபெரும் கூட்டத்தை கூட்டி, கறிவிருந்து என்ற பெயரில் கும்மாளம் போட்ட சம்பவம் குன்றத்தூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாசில்தாரின் இச்செயலுக்கு அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.