சென்னை: சென்னை பூக்கடை உதவி கமிஷனருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளத. சென்னை தலைமை செயலகம் பூக்கடை உதவி கமிஷனர் கட்டுப்பாட்டில் வருகிறது. இதனால் சுதந்திர தின பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்து போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பூக்கடை உதவி கமிஷனர் பாலகிருஷ்ணபிரபுவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து உதவி கமிஷனர் கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட் கொரோனா மையத்தில் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டுள்ளார்.