தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பலி தனியார் மருத்துவமனையில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: பல நாட்கள் சிகிச்சைக்கு பிறகு 17 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தனியார் மருத்துவமனையில் நிகழும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதில் 17 பேர் பல நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 முதல் 6 ஆயிரம் என்ற நிலையில் இருந்து வருகிறது. இதேபோன்று தினசரி மரணங்களின் எண்ணிக்கையும் 100 முதல் 120 வரை பதிவாகிறது. சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களிலும் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் பதிவாகும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை திடீர் என்று உயர தொடங்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 7ம் தேதிக்கு முன்பாக தமிழகத்தில் தினசரி 100 முதல் 120 மரணங்கள் பதிவானது. இதில் 20 முதல் 30 மரணங்கள் தனியார் மருத்துவமனைகளிலும், 80 முதல் 90 மரணங்கள் அரசு மருத்துவமனைகளிலும் பதிவாகி இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 7ம் தேதி முதல் இந்த தனியார் மருத்துவமனைகளில் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்படி தனியார் மருத்துவமனைகளில் தினசரி 30 முதல் 50 மரணங்கள் பதிவாகி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் தினசரி 80 முதல் 90 மரணங்கள் பதிவாகி வருகிறது.

தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி 41 பேரும், 8ம் தேதி 37 பேரும், 9ம் தேதி 34 பேரும், 10ம் தேதி 34 பேரும், 11ம் தேதி 47 பேரும், 12ம் தேதி 41 பேரும், 13ம் தேதி 38 பேரும், 14ம் தேதி 34 பேரும், 15ம் தேதி 44 பேரும் மரணம் அடைந்துள்ளனர். இதில் பல நாட்கள் சிகிச்சை பெற்ற பின் 17 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஆகஸ்ட் 7ம் வெளியான அறிக்கையில் 3 பேர் மரணம் 36, 29, 30 நாட்கள் சிகிச்சை பெற்று அதன் பிறகு மரணம் அடைந்துள்ளனர். ஆகஸ்ட் 8ம் தேதி வெளியான அறிக்கையில் 34 மற்றும் 44 நாட்கள் சிகிச்சை பெற்ற இருவர் மரணம் அடைந்துள்ளனர்.

ஆகஸ்ட் 9ம் தேதி வெளியான அறிக்கையில் 27 மற்றும் 31 நாட்கள் சிகிச்சை பெற்ற இருவர் மரணம் அடைந்துள்ளனர். இதேபோன்று ஆகஸ்ட் 11ம் தேதி வெளியான அறிக்கையில் 3 பேரும், 12ம் தேதி வெளியான அறிக்கையில் ஒருவரும், 13ம் தேதி வெளியான அறிக்கையில் 3 பேரும், 14ம் தேதி வெளியான அறிக்கையில் ஒருவரும், 15ம் தேதி வெளியான அறிக்கையில் இரண்டும் பேரும் மரணம் அடைந்துள்ளனர். இதன்படி 20 முதல் 50 வரை நாட்கள் வரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு சிகிச்சை பலனில்லாமல் 17 பேர் கடந்த சில நாட்களில் மரணம் அடைந்துள்ளனர்.

Related Stories: