சென்னை: திருமண முகூர்த்தங்கள் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் அலங்காரம், போக்குவர்து போன்றவற்றுக்கு சிறப்பு அனுமதி வழங்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ராம்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. 23.8.20 மற்றும் 30.8.20 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் 24.8.20 மற்றும் 31.8.20 ஆகிய இரு திங்கட்கிழமைகளிலும் நிறைய திருமணங்கள் நடைபெற உள்ளன. திருமணம் மற்றும் அதனைச் சார்ந்த நிகழ்ச்சிகள் நல்லவிதமாக நடைபெற ஊரடங்கு தடையாக உள்ளது. நிறைய பேர் ஓட்டலில் சாப்பிட்டு வெளியூரில் வேலை பார்த்து வருகிறார்கள். பலர் தனி வாகனம் கொண்டு பணியாளர்களை வேலைக்கு அழைக்க இயலாத சிறிய தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள்.