சென்னை: தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் 150 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் நேற்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று தேசிய கொடி ஏற்றி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: சத்தியமூர்த்தி பவனில் அமைக்கப்பட்டுள்ள 150 அடி கொடி கம்பத்தை ராயபுரம் மனோ, திரவியம் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்தார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றி. செல்வந்தர்கள், கொள்கை மறந்தவர்கள் வந்த போது இந்திரா காந்தி அன்று காளியாக அவதாரம் எடுத்து காங்கிரசை தூய்மை செய்தார். அதேபோல, ராகுல் காந்தி அவதாரமாக வந்து இருக்கிறார். அதற்கு முதல் உதாரணம், ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த நிகழ்வுதான்.இவ்வாறு அவர் பேசினார்.