சேலம் : பாம்பின் வாயில் சிக்கிய தவளை போல் பாஜகவிடம் அதிமுக சிக்கி இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.சேலத்தில் இன்று அளித்த பேட்டியில் அளித்த அவர், அதிமுகவை போல பிற கட்சிகளை பலவீனப்படுத்தும் பாஜகவின் முயற்சி ஒரு போதும் பலிக்காது என்றார்.மேலும் அவர் கூறியதாவது, தமிழகத்தில் பாஜக கால்ஊன்ற சாதி, மத கலவரங்களை ஏற்படுத்துகிறது. கேடி, ரவுடிகளை கட்சியில் சேர்த்து வருகிறது. இதர கட்சிகளை பலமிழக்க செய்யும் முயற்சியிலும் பாஜக ஈடுபடுகிறது. பாஜ என்னும் பாம்பின் வாயில் அகப்பட்ட தவளையாக அதிமுக இருக்கிறது. தலை மட்டும் தான் லேசாக வெளியே தெரிகிறது. அதனால் இனி பாம்பின் வாயில் இருந்து மீள முடியாது.திமுக தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற கூட்டணி கொள்கை ரீதியானது. எங்கள் முதல்வர் வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை 2 ஆண்டுக்கு முன்பே அறிவித்து விட்டோம்.