சென்னையில் குப்பைகளுடன் பணத்தை சேமித்து வைத்த மூதாட்டிகள்...!! ரூ.2 லட்சம் இருந்ததால் போலீஸ் வியப்பு!!!

சென்னை: குப்பைகளை வீட்டில் குவித்து வைத்து விட்டு சாலையோரம் வசித்த வயதான சகோதரிகளின் வீட்டை சுத்தம் செய்த போலீசார் 2 லட்சம் ரூபாய் அளவிற்கு நாணயங்களை கண்டெடுத்துள்ளன. சென்னை ஓட்டேரி சத்தியவாணி முத்து நகரில் 3 வயதான மூதாட்டிகள் வசித்து வந்தனர்.  இவர்களில் பிரபாவதி என்ற மூதாட்டி கடந்த மாதம் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து தெருவோரம் கிடக்கும் நெகிழி குப்பைகளை விற்று வாழ்ந்து வந்த மற்ற இருவரும் சாலையோரம் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் போலீசார் சாலையோரம் வசிக்கும் மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் இருப்பதை அறிந்த போலீசார் வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அப்போது இவர்கள் இருவரும் வீட்டில் தங்க இடமில்லை என்று கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீடுகள் முழுவதும் குப்பைமேடுகளாக இருந்துள்ளன.

பின்னர் அவற்றை மாநகராட்சி ஊழியர்களுடன் போலீசார் அகற்றியபோது, குப்பையிலிருந்து பணம் மற்றும் சில்லறை காசுகள் சிதறி விழுந்துள்ளன. பின்னர் அதனை என்னிபார்த்ததில் செல்லாத 40 ஆயிரம் ரூபாய் உட்பட 2 லட்சம் ரூபாய் இருந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வீட்டை சுத்தம் செய்வதுடன் பணத்தையும் அவர்களிடம் ஒப்படைக்க உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: