கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை பகுதியில் பிரதான சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த காற்று வீசி வருகிறது. நேற்று காலை கொடைக்கானல் மேல்மலை பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையான கோசன் சாலையில் பூம்பாறை - மன்னவனூர் இடைப்பட்ட பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த கொடைக்கானல் நெடுஞ்சாலைத் துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர்.