சென்னை: கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து அல்லாத இயந்திரங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான சாலை வரியை ஜூன் 30ம் தேதிக்குள் செலுத்த கூறியது. ஆனால், செலுத்தாத 3 மாதங்களுக்கான சாலை வரிக்கு 100 சதவீத வரியும், அதற்கு அடுத்துள்ள 3 மாதங்களுக்கான சாலை வரியையும் சேர்த்து செலுத்தும் வகையில் வந்துள்ளது. இதனால் மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் பல ஆயிரம் ரூபாய் அபராத தொகையாக செலுத்த வேண்டியுள்ளது. ஏற்கனவே ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அபராத தொகையை செலுத்துவது அவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.