சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா நிலையத்தை அவரது நினைவு இல்லமாக மாற்றுவதற்காக தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 24 ஆயிரம் சதுர அடி பரப்பு கொண்ட வேதா நிலையம் அமைந்துள்ள இடத்துக்கு ரூ.68 கோடி இழப்பீடு நிர்ணயித்து நிலம் கையகப்படுத்தும் அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின்படி, ரூ.68 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தி, வேதா நிலையம் இல்லத்தை அரசுடைமையாக்கி தமிழக அரச அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், வேதா நிலையத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்த்தும், இழப்பீடு நிர்ணயித்த உத்தரவை எதிர்த்தும் ஜெயலலிதாவின் சட்ட பூர்வ வாரிசுகளான தீபக் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.