சென்னை: குட்கா எளிதில் கிடைப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே பேரவைக்கு எடுத்து செல்லப்பட்டது. சபாநாயகரை அவமதிக்கும் நோக்கம் இல்லை என ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட குட்காவை பேரவைக்கு எடுத்து வந்தது தொடர்பான உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. உரிமை மீறல் பிரச்சனையில் சட்டமன்ற விதிகள் பிறப்பற்றவில்லை என வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர். கருத்து தெரிவித்ததற்காவே உரிமை மீறல் பிரச்சனை எழுப்ப முடியாது எனவும் வாதம் செய்தனர்.