9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேரை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; தூத்துக்குடி மாவட்ட முன்னாள் எஸ்.பி. அருண் பாலகோபாலன் சென்னை சைபர் கிரைம் பிரிவு  எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை நிர்வாக ஏ.ஐ.ஜியாக ஓம் பிரகாஷ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை சிபிசிஐடி சைபர் பரிவு எஸ்.பி.யாக எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிர்வாக பிரிவு ஏ.ஐ.ஜி.யாக ஓம்பிரகாஷ் மீனா ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு எஸ்.பி.யாக கே.பி.எஸ்.ஜெயச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிலா அபகரிப்பு தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக ஷியாமளா தேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு உறுதி ஆணையராக கண்ணம்மாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை அம்பத்தூர் உதவி ஆணையராக தீபா சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை சைபர் க்ரைம் எஸ்பியாக நிஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: