பெங்களூரு: ‘‘பிஎஸ்என்எல். தொழிலாளர்களை தேசத் துரோகிகள்,’’ என்று பாஜ எம்பி அனந்தகுமார் ஹெக்டே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த பாஜ. எம்பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்த்குமார் ஹெக்டே சர்ச்சைக்கு பெயர் போனவர். தரக்குறைவாக பேசி சர்ச்சையில் சிக்குவது இவருடைய வழக்கம். இந்நிலையில், அவர் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மத்திய அரசால் காப்பாற்ற முடியவில்லை. இதனால் ஏற்கனவே 85 ஆயிரம் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளோம். வரும் நாட்களில் மீதமுள்ள தொழிலாளர்களையும் வீட்டுக்கு அனுப்பி வைப்போம்.