மாநில அளவில் செங்கை மாவட்டம் கொரோனா பாதிப்பில் 2வது இடம்

செங்கல்பட்டு: தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில், செங்கல்பட்டு மாவட்டம் தொடர்ந்து 2வது இடத்தை பிடித்துள்ளது. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 18,735 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா உறுதியானது. மாவட்டம் முழுவதும் 15,408 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரேநாளில் 4 பேர் இறந்தனர். மாவட்டத்தில் இதுவரை 316 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

Related Stories: