சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை:
மாநிலம் முழுவதும் மூடி வைக்கப்பட்டுள்ள காய்கறி, பூ, பழம் வணிக வளாகம், சென்னை கோயம்பேடு காய்கறி, பூ, பழம் வணிக வளாகம், மற்றும் உணவு தானிய வணிக வளாகத்தையும் விரைந்து திறந்திட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொது போக்குவரத்து முடக்கப்பட்டு, தனியார் பேருந்துகள் இயக்கப்படால் இருக்கின்றன. வணிக செயல்பாடுகளுக்கு பெரும் இடையூறாய் இருப்பதை கவனத்தில் கொண்டு உடனடியாக இ-பாஸ் முறையை ரத்துசெய்யவேண்டும்.