திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் மழைக்காலங்களில் பெரிய ரக விமானங்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பாதுகாப்பு கருது பெரிய விமானங்கள் இறங்க தடை விதித்து விமான இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த விமானம் விபத்தில் சிக்கியதை அடுத்து இயக்குனரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.