திண்டுக்கல்: தாடிக்கொம்பு அகரத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் பொது மயானத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்டது அகரம் பிரிவு. இங்குள்ள குடகனாறு ஆற்றங்கரையில் பொது மயானம் உள்ளது. பேரூராட்சி சார்பில், கடந்த 2010ல் ரூ.3 லட்சம் செலவில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் மயான வளாகத்தில் இறுதி சடங்கு செய்யும் அமர்வு இடம் மற்றும் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் உரிய பராமரிப்பில்லாததால் அமர்வு இடமும், கழிவறையும், சுகாதார வளாகமும் சுகாதாரமின்றி உள்ளது.