சென்னை: முதுபெரும் பாடலாசிரியரும், தமிழறிஞருமான பி.கே. முத்துசாமி உடல்நலக்குறைவால் காலமானார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்ப்புதுப்பட்டியை சேர்ந்த முத்துசாமி வெண்பா கவிஞர் என்று போற்றப்பட்டவர். 1920ல் பிறந்த இவருக்கு தற்போது வயது 102. ஆனாலும் 16 வயது இளைஞர் போல் சுறுசுறுப்பாக தனி ஒரு ஆளாய் எங்கும் புத்தகங்கள், விருதுகள் என சிறிய வீட்டில் தானே சமைத்து உண்டு வாழ்ந்து வந்தார். இளமை காலத்தில் சுற்றுப்புற கிராமங்களில் நாடக மேடைகளில் பல்வேறு நாடகங்களை நடத்தியவர் இவர். இந்த கால பாடல் வரிகளை விட அந்த கால பாடல் வரிகள் இன்றளவும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. அந்த வகையில், பல்வேறு படங்களுக்கு சிறப்பான பாடல் வரிகளை எழுதியவர் பி..கே.முத்துசாமி. 1958ம் ஆண்டு வெளியான தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில் இடம்பெற்ற மண்ணுக்கு மரம் பாரமா..மரத்துக்கு இலை பாரமா.. குழந்தைக்கு தாய் பாரமா என்ற பாடல் மிகவும் பிரபலமானது.