சென்னை: பிரதமர் மோடி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை தொடங்கியது.கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி எடுத்துரைக்கிறார்.