கொரோனா பாசிட்டிவ்: பெண் தற்கொலை

சென்னை: புதுவண்ணாரப்பேட்டை ராம அரங்கன் தெருவை சேர்ந்தவர் வள்ளி (58). இவருக்கு 3 மகள்கள். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். வள்ளி மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த சில நாளாக காய்ச்சல் இருந்ததால் நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்தார். அதன் முடிவு நேற்று காலை வந்தது. அதில், கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் மனமுடைந்த வள்ளி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புதுவண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: