சென்னை: சென்னை மாநகர காவல் துறையில் கொரோனாவால் 1,700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், சுமார் 1,500 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதே சமயம் சிலர் கொரோனாவால் இறந்துள்ளனர். இந்நிலையில், அம்பத்தூர் சரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பரணிகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். மேலும், அவருடன் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு, காவலர்கள் உள்ளிட்டோரும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கொரோனா தொற்றை தடுக்கும் களப்பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இன்ஸ்பெக்டர் பரணிகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜ், அணிருதீன், ஏட்டுகள் ஐயப்பன், சந்திரசேகர் ஆகியோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.