நடிகர்கள் சூர்யா, விஜய் குடும்பங்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் இகழ்வது ஏற்கத்தக்கதல்ல: இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனம்..!!

சென்னை: நடிகர்கள் சூர்யா, விஜய் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல என்று இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். பிறரை பழிக்க வேண்டாம் என நடிகை மீரா மிதுனுக்கு பாரதிராஜா அறிவுரை வழங்கியுள்ளார். நடிகை மீரா மிதுன் அண்மையில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக சில அவதூறு கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். அதில் தமிழில் மிக முக்கியமான முன்னணி நடிகர்கள் குறித்த கருத்துக்களும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சனங்களும் அவரது பதிவில் இடம்பெற்று வருகின்றன.

மேலும் இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் நெப்போடிசம் செய்கின்றனர் என்று அவர் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி அதுகுறித்து தொடர் பதிவு வெளியிட்டு வந்தார். இந்நிலையில், அதனை கண்டிக்கும் வகையில் தற்போது இயக்குநர் பாரதிராஜா  அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். அதில் தனிப்பட்ட முறையில் ஒருவரை தாக்குவது என்பது மிகப்பெரிய கண்டனத்துக்குரிய செயல். அதுமட்டுமல்லாமல் விஜய், சூர்யா ஆகிய இருவரும் தமிழ் சினிமாவிலும், சமூகத்திலும் நற்பெயருடன் நல்ல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.

கவர்ச்சிகரமான சினிமா துறையில் பெயர் கெட்டுவிடாத வகையில் சூர்யா, விஜய் வாழ்கின்றனர். பல குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் பணியை சூர்யா செய்கிறார். சத்தமில்லாமல் சில மனிதாபிமான பணிகளை நடிகர் விஜய் செய்து வருகிறார். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையியோ அல்லது அவர்கள் பற்றியோ இவ்வாறு விவாதம் செய்வது மிகப்பெரிய கண்டனத்துக்குரியது. இதற்கு அனைவரும் ஒரு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். நடிகர் சங்கமும் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் புகழ் தேடுவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. மீரா மிதுனுக்கு வாழ்க்கை இருக்கிறது. நேரம், காலம் இருக்கிறது. அவர் நேர்மையான முறையில் செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

Related Stories: