திருச்சி: திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அருகே உள்ள அனலை கிராமம் பெரியார் நகரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஆனந்த் (26). வாத்தலை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த இவர், நேற்றுமுன்தினம் இரவு 9மணிக்கு பணி முடிந்து வீட்டுக்கு சென்றார். நேற்று அதிகாலை கோவிந்தராஜ் எழுந்து மாட்டு கொட்டகைக்கு சென்றார். அப்போது அங்கு மகன் ஆனந்த் தனது தாயின் சேலையில் தூக்கில் தொங்குவதை கண்டு பார்த்து அதிர்ச்சியடைந்தார்.