தஞ்சை: தஞ்சை தொகுதி திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்து கொண்டிருப்பினும் பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்த நிலை எப்போது மாறி, மீண்டும் பழைய நிலை திரும்பும் என மக்கள் எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர். பலரை உயிரிழக்க செய்துள்ள இந்த கொடிய வகை கொரோனா வைரஸால் தமிழக ஆளுநர் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல அமைச்சர்களுக்கும் எம்எல்ஏக்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது.