சென்னை: குன்றத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர், கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் குறையாமல் இருந்து வருகிறது. சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுக்கு , களத்தில் நின்று கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்களும் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையை அடுத்த குன்றத்தூரில் உள்ள காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பாண்டி முனி(53), கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட்டார்.