சென்னை: அமைச்சர்கள் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சமீப காலமாக பங்கேற்ற நிகழ்ச்சிகளில் உரிய சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. அந்த இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, முதலமைச்சர், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது உரிய கொரோனா தடுப்பு, பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்குமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.