சென்னை: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட 5ம் தேதி(இன்று) பூமி பூஜை சிறப்பாக நடக்க எனது சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். 1992 நவம்பர் 23ம் தேதியன்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெயலலிதா ‘அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்’ என்று வலியுறுத்திப் பேசினார். அதே சமயம், மசூதியும் அயோத்தியில் இருக்க வேண்டும் என விரும்பினார்.