சென்னை: தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை நிலுவையை உடனே சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு தருமாறு உத்தரவிட கோரி கல்வி நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்க தலைவர் பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்க கூடிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் மாநில ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை அந்த மாணவர்களின் கல்வி கட்டணமாக சம்மந்தப்பட்ட கல்லூரிகளுக்கு தரப்படும்.