சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். இதில் கோயம்பேடு காய்கறி வணிக வளாக சந்தை கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகர் உள்ளிட்ட 38 மார்க்கெட் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு வருகிற 10ம் தேதிக்குள் கோயம்பேடு வணிக வளாகத்தை திறப்பதற்கு உரிய நடவடிக்கையை துரிதப்படுத்தி, 24 மணி நேரமும் சுதந்திரமாக இயங்கிட அனுமதி அளிக்க வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்த்திட வணிக வளாக சுற்றுப்பாதையை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும்.