குன்னூர்: குன்னூர் மலைப்பாதையில் அவ்வப்போது குட்டிகளுடன் காட்டு யானைகள் உலா வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கொரோனா பரவலை தடுப்பதற்காக நீடித்து வரும் ஊரடங்கு உத்தரவால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனங்கள் இல்லாமல் அமைதியான சூழல் நிலவி வருகிறது.இந்நிலையில் குன்னூர்,பர்லியாறு பகுதியில் பலா பழ சீசன் என்பதால், மலைப்பாதையில் யானைகள் முகாமிட்டுள்ளது.