சென்னை: பிரதமர் நரேந்திர மோடியுடன் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று தொலைபேசியில் பேசியுள்ளார். ஓபிசி இடஒதுக்கீடு குறித்து கடிதம் எழுதிய நான், இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஓபிசி இடஒதுக்கீடு குறித்து பேசினேன் என்றும் அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் பேசியதாவது: மருத்துவ படிப்புக்காக இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதத்தை இடஒதுக்கீடு செய்ய சட்டம் இயற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.