சென்னை: ஆகஸ்ட் 31ம் தேதி வரை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை தொடரும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனாவால் தமிழகம் முழுவதும் நீதிமன்றங்கள் மூடப்பட்டன. அதே நேரத்தில் வழக்குகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட நீதிமன்றங்களில் சமூக இடைவெளி, பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு முக்கிய வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. நேரடி விசாரணை இல்லை. இதனால் வக்கீல்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி வீடியோ கான்பரன்சில் வழக்கு விசாரணை: ஐகோர்ட் அறிவிப்பு
- ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு எதிரொலி வீடியோ வழக்கு சோதனை: ஐகார்ட் அறிவிப்பு
- வீடியோ மாநாட்டு சோதனை
- Icourt