சென்னை:தியாகத்தை போற்றும் பக்ரீத் திருநாள் இஸ்லாமிய மக்களால் நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வழக்கமாக தமிழகத்தில் உள்ள பள்ளி வாசல்கள், திடல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். ஆனால், கொரோனா பாதிப்பால் இஸ்லாமியர்கள் அவரவர் வீடுகளில் தனிமனித இடைவெளியில் தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்கு பிறகு இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் அளித்த பேட்டியில் ‘ஊரடங்கு அமலில் இருப்பதால் இஸ்லாமியர்கள் வீட்டிலேயே தொழுகை நடத்தி கொரோனா நெருக்கடியில் இருந்து தேசம் மீண்டு வர வேண்டும் என்று ஒவ்வொரு இஸ்லாமியரும் பிராத்தனை செய்தனர்.