சென்னை: தமிழ் தேசியம் பேசும் சீமான் தரப்பிலும், ஹரி நாடார் தரப்பில் இருந்தும் இதுவரை என்னிடம் தற்கொலை முயற்சி குறித்து பேசவில்லை என்று நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டி உள்ளார். நடிகை விஜயலட்சுமி கடந்த 26ம் தேதி திருவான்மியூரில் உள்ள வீட்டில் எனது தற்கொலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் ஹரி நாடார் தான் காரணம் என்று கூறி தனது முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இந்நிலையில் தனது திருவான்மியூர் வீட்டில் நடிகை விஜயலட்சுமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எப்போது எனக்கு நியாயம் கிடைக்கும். சீமானுக்கு எப்ப உணர்வு வரப்போகிறது. ஹரி நாடாருக்கும் எப்போது உணர்வு வரப்போகிறது. அன்றைக்கு ஹரி நாடார் வந்து சொல்கிறார், நடிகை விஜயலட்சுமி மருத்துவமனையில் டிராமா போடுகிறார் என்கிறார்.