சீமான், ஹரி நாடார் தரப்பிலிருந்து இதுவரை என்னிடம் பேசவில்லை: நடிகை விஜயலட்சுமி பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: தமிழ் தேசியம் பேசும் சீமான் தரப்பிலும், ஹரி நாடார் தரப்பில் இருந்தும் இதுவரை என்னிடம் தற்கொலை முயற்சி குறித்து பேசவில்லை என்று நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டி உள்ளார்.  நடிகை விஜயலட்சுமி கடந்த 26ம் தேதி திருவான்மியூரில் உள்ள வீட்டில்  எனது தற்கொலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் ஹரி நாடார் தான் காரணம் என்று கூறி தனது முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.  இந்நிலையில் தனது திருவான்மியூர் வீட்டில் நடிகை விஜயலட்சுமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எப்போது எனக்கு நியாயம் கிடைக்கும். சீமானுக்கு எப்ப உணர்வு வரப்போகிறது. ஹரி நாடாருக்கும் எப்போது உணர்வு வரப்போகிறது. அன்றைக்கு ஹரி நாடார் வந்து சொல்கிறார், நடிகை விஜயலட்சுமி மருத்துவமனையில் டிராமா போடுகிறார் என்கிறார்.

இப்போது தமிழ் தேசியத்துக்கும், தமிழ் பெண் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் போதும், அதற்கு வந்து சீமான், ஹரிநாடார் பேச முடியாமல் ஒரு மனிதாபிமானம் இல்லாமல் இருக்கின்றனர்.   இதுவரை ஹரிநாடார் தரப்பில் இருந்தோ, சீமான் தரப்பில் இருந்தோ யாரும் பேசவில்லை. அவர்கள் வந்து சமரசம் பண்ண வேண்டும்.  

 தமிழர்களுக்காக போராடக்கூடிய போராளி என்று சொல்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் இப்போது சாப்பாடு, தண்ணீர் இல்லாம் இருக்கிறேன். சீமான் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்.  இவ்வாறு அவர் கூறினார்.  

Related Stories: