கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை கூடுகிறது. ஆடு, மாடு, கோழிகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடக மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள், விவசாயிகள் சந்தைக்கு வந்து இவற்றை வாங்கி செல்வது வழக்கம். வாரந்தோறும் சுமார் 5 கோடிக்கு சந்தையில் வர்த்தகம் நடைபெறும். இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் மாத இறுதியில் வாரச்சந்தைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.