சென்னை: சார்ஜா, ஓமன் நாடுகளிலிருந்து 2 மீட்பு சிறப்பு விமானங்கள் நேற்றுமுன்தினம் இரவு சென்னை வந்தனர். இதில், 317 பேர் வந்தனர். ஓமனிலிருந்து வந்த 4 பெண்கள் உட்பட 44 இந்தியர்கள் முறையான பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் இல்லாமல் அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள். இவர்கள் 44 பேரையும் குடியுரிமை அதிகாரிகள் நேற்று அதிகாலை வரை விசாரணை நடத்தினர். பின்பு பல்லாவரம் ராணுவ முகாமிற்கு பலத்த காவலுடன் அனுப்பப்பட்டனர்.