சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மறு தேர்வில் 180 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்2 தேர்வு 24ம் தேதி வரை நடந்தது. தேர்வுகள் நடக்கும் போதே, கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலை உருவானது. இதையடுத்து மார்ச் 24ம் தேதி பெரும்பாலான மாவட்டங்களில் போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டது. அதனால், அன்று தேர்வு எழுத வர வேண்டிய மாணவர்கள் வரமுடியாமல் போனது. இதன்படி தமிழகம் முழுவதும் 34 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இதையடுத்து அவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன்படி ஜூலை 27ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.