பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்க மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர்கள் கைது

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகில் இருந்து மதுபானங்களை சென்னைக்கு பைக்கில் வாங்கி சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக  திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி கல்பனா தத் மேற்பார்வையில் எஸ்.ஐ. வெங்கடேசன் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் பெரியபாளையம் அருகே கொசவன்பேட்டை பகுதியில் நேற்று திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பெரியபாளையம் பகுதியில் இருந்து வந்த ஒரு பைக்கை சோதனை செய்தனர். அதில், சென்னை செங்குன்றம் சோலையம்மன் நகரை சேர்ந்த வினோத்பெருமாள் (30) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 70 மதுபான பாட்டில்களையும், புழல் சண்முகபுரம் பகுதியை சேர்ந்த யுவராஜ் (26) என்பவர் 30 மதுபான பாட்டில்களையும் தலையில் சுமந்து எடுத்துச்சென்றபோது அவரிடம் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் பெரியபாளையம் பகுதியில் மதுபானங்களை வாங்கிக்கொண்டு சென்னைக்கு எடுத்துச்சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வதால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: