சென்னை: டாடா குழுமத்தின் தனிஷ்க் நிறுவனம், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமது ஷோரூம்களில் கோல்டு ஸ்டாண்டர்டு எனப்படும் பாதுகாப்பு தொடர்பான மின் புத்தகம் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் கடை ஊழியர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறது. கடை நுழைவாயிலில் பாத அணிகளை சுத்திகரிக்கும் விரிப்புகள், வெப்பநிலை பரிசோதனை கருவி, முகத்தடுப்பு ஷீல்டு, ஆக்சிஜன் அளவீட்டு கருவி, மின்னணு பண பரிவர்த்தனை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நகைகளை சுத்திகரிக்க யு.வி.சி சேம்பர்ஸ் எனப்படும் புற ஊதா கதிர் அறைகள் பயன்படுத்தப்படுகிறது. வாடிக்கையாளர் நகையை அணிந்து பார்த்த பிறகு நீராவி மூலம் சுத்திகரிப்பது, கிருமி நாசினி மற்றும் அல்ட்ராசானிக் பீம் ஆகிய முறைகளில் நகைகளை சுத்திகரிப்பது பேன்றவை செய்யப்படுகிறது.